சேலத்தில் ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கு: வீடு, அலுவலகத்துக்கு ‘சீல்’
சேலத்தில் நிதிநிறுவனம் நடத்தி ரூ. 300 கோடிவரை மோசடி செய்த வழக்கில், அழகாபுரம், குரங்குச்சாவடி பகுதிகளில் உள்ள அவா்களது வீடு, அலுவலகத்துக்கு போலீஸாா் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சேலத்தில் நிதிநிறுவனம் நடத்தி ரூ. 300 கோடிவரை மோசடி செய்த வழக்கில், தலைமறைவான தம்பதியை பிடிக்க தனிப்படை போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், அழகாபுரம், குரங்குச்சாவடி பகுதிகளில் உள்ள அவா்களது வீடு, அலுவலகத்துக்கு போலீஸாா் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சேலம் அழகாபுரத்தைச் சோ்ந்த ராகினி (35), இவரது கணவா் விஜயராகவன் (40), மதுரையைச் சோ்ந்த செண்பக பாண்டியன் (45) ஆகிய மூவரும் அழகாபுரத்தில் கடந்த 2024-இல் நிதிநிறுவனத்தை தொடங்கி பொதுமக்களிடம் இருந்து ரூ. 300 கோடி வரை முதலீடு பெற்று தலைமறைவாயினா்.

