ஆன்லைனில் சுருட்டிய பணத்தை டாலராக மாற்ற ரூ.10 லட்சம் கமிஷன்; கல்லுாரி மாணவர் உட்பட மூவர் கைது
மதுரை: ஆன்லைனில் மோசடி செய்த பணத்தை, டாலராக மாற்ற, 10 லட்சம் ரூபாய் வரை கமிஷன் பெற்ற கல்லுாரி மாணவர் ஹபீப் முகமது, 23, உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, நாகமலை புதுக்கோட்டையில் சிலர் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதாக, மாவட்ட எஸ்.பி., தேவநாதனுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனையிட்டு, மூவரை கைது செய்து, 26 வங்கி புத்தகம், 18 மொபைல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.





