அல்கொய்தா ஆதரவு குழுவுடன் தொடர்பிலிருந்த உ.பி. இளைஞர் கோவையில் கைது
அல்கொய்தா பயங்கரவாத சித்தாந்தத்தை ஆதரிக்கும் ஆன்லைன் குழுவுடன் தொடர்பில் இருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மக்சூத் அலி என்ற இளைஞர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முகமது நபீல் என்பவரை கடந்த வாரம் உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஒருவரை ஒருவர் ரகசியமாகத் தொடர்புகொள்ள மக்சூத் அலி என்பவர் பிரத்யேக செயலியை வடிவமைத்து தந்ததும், கோவையில் அவர் தங்கியிருப்பதும் தெரியவந்தது.


