பி.ஏ.பி. 2ம் மண்டலத்துக்கு நீர் திறக்காவிட்டால் போராட்டம்
திருப்பூர்: பி.ஏ.பி. பாசன கால்வாய்களை துார்வாரி, 2-ம் மண்டலத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் திறக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர்.
தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறியதாவது:
பி.ஏ.பி. திட்டத்தில் கால்வாய் துார்வாருதல், 1, 3, 4-ம் மண்டலங்களில் பாசனம் பெறும் மடைகளை அடைத்து பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் ஆண்டுதோறும் ஜூலை மாதத்திலேயே முடிக்கப்படும். அதன் பின்னர் அதிகாரிகள் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, அணைகளில் உள்ள நீரின் இருப்புக்கு ஏற்ப தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்வர்.


