முல்லைப் பெரியாறு அணையில் 3 நாட்கள் நடந்த மதிப்பீட்டு நிபுணர் குழுவின் ஆய்வு நிறைவு விரிவான ஆலோசனை நடத்த வேண்டியுள்ளதாக குழுத்தலைவர் தகவல்
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த விரிவான மதிப்பீட்டு நிபுணர் குழுவின் 3 நாட்கள் ஆய்வு நேற்று நிறைவடைந்தது.
''முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையான அணையாக இருப்பதால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் குறித்து எங்களுக்குள் மேலும் விரிவான ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது,'' என, குழுவின் தலைவர் பல்ராஜ் ஜோஷி தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணையில் அணை பாதுகாப்பு குறித்த விரிவான மதிப்பீட்டு நிபுணர் குழு தலைவர் பால்ராஜ் ஜோஷி தலைமையில் செப்., 1ல் அணைப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 2வது நாளான செப்., 2ல் தேக்கடியில் தனியார் ஓட்டலில் இரு தரப்பு அதிகாரியுடன் இணைந்து ஆய்வு குறித்து அனைத்து விபரங்களையும் பதிவு செய்தனர்.


