பேருந்து நிலையம் இல்லாததால் மானாமதியில் பயணியர் அவதி
திருப்போரூர், செப். 17– மானாமதி ஊராட்சியில் பேருந்து நிலையம் இல்லாததால், பயணியர் கடும் அவதியடைந்து
மானாமதி ஊராட்சியில் பேருந்து நிலையம் இல்லாததால், பயணியர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சிக்கு உட்பட்ட ஆமையம்பட்டு, சந்தனாம்பட்டு, பெரியார் நகர் உள்ளிட்ட கிராமங்களில் 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, அரசு மேல்நிலைப்பள்ளி, காவல் நிலையம், கூட்டுறவு வங்கி, ஐ.ஓ.பி., வங்கி, வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வணிக கடைகள் உள்ளிட்டவை உள்ளன. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். பல்வேறு தேவைகளுக்கும் சுற்று வட்டார கிராம மக்கள் மானாமதிக்கு வந்து செல்கின்றனர்.
அதேபோல் மானாமதியில் இருந்து அடையாறு, தாம்பரம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.



