தனியார் பல்கலை. நிலம், நிதி குறைப்பு சட்ட திருத்த மசோதா.. பேரவையில் நிறைவேற்றம்!
தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்க நிலம், நிதி குறைக்கும் சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றம்.
தனியார் பல்கலைகழங்கள் அமைப்பதற்காக நிலம் மற்றும் அறக்கட்டளை நிதியை குறைப்பதற்கான சட்டத் திருத்த முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவை உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் தாக்கல் செய்த நிலையில் ஆய்வு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பாமக உறுப்பினர் கணேஷ்குமார், பல்கைலைக்கழகத்தில் நிலபரப்பு மற்றும் வைப்பு தொகை குறைப்படுகிறது. இதன் காரணமாக பல்கலைக்கழகம் தனியார்மயம் ஆக்கப்படுவதை அதிகமாக இருக்கும். அதோடு இந்த சட்டம் எழை எளிய மக்களுக்கு பயன் தராது. எனவே சட்டதிருத்தத்தை கை விட வேண்டும் என்று தெரிவித்தார்.







/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

