காதலியை பார்க்க சென்ற காதலன்.. கொதிக்கும் எண்ணையை ஊற்றிய தாய்.. முகம் கருகிய இளைஞருக்கு தீவிர சிகிச்சை
காவேரிப்பாக்கம் அருகே காதலியை பார்க்கச் சென்ற லோகேஷ் கண்ணன் முகத்தில், காதலியின் தாய் தமீம் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே காதலியை பார்க்க சென்ற காதலனின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உத்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமீம் என்ற பெண் கணவனை இழந்து வாழ்ந்து வருகிறார். இவர் தனது மகன் மற்றும் 18 வயது மகளுடன் காவேரிப்பாக்கம் முத்தீஸ்வரர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகளும், ஒச்சேரி அருகே ஆயர்பாடி ரோட்டு தெருவைச் சேர்ந்த 19 வயதான லோகேஷ் கண்ணனும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.


