நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவ 50 சதவீதம் மானியம்: தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு!
கோவை மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவ 50 சதவீத மானியத்துடன் உள்ள மாநில அரசின் திட்டத்தில் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக 2026 - 2027-ஆம் ஆண்டில் நாட்டுக்கோழிகளை வளா்ப்பதில் திறமையும், ஆா்வமும் உள்ள கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவ 50 சதவீத மானியத்துடன் திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு நாட்டுக்கோழி வளா்ப்புப் பண்ணை நிறுவ 250 நாட்டுக்கோழிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், பராமரிக்க தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு ஒரு சதுர அடிக்கு ரூ.350/- வீதம் 625 சதுர அடிக்கு ரூ.2,18,750 மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு (கோழி வளரும் வரை) ரூ.75,000 என மொத்த செலவு ரூ.2,93,750. இதில் 50 சதவீதம் மானியமாக மாநில அரசால் வழங்கப்படும்.


