ஏரியை துார் வாரும் பணி தொடக்கம்
மதுராந்தகம், செப். 5-– மதுராந்தகம் ஏரியை துார் வாரும் பணியை செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் கொடியசைத்து,
மதுராந்தகம் ஏரியை துார் வாரும் பணியை செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் கொடியசைத்து, நேற்று தொடங்கி வைத்தார்.
மதுராந்தகத்தில் உள்ள ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 2,500 ஏக்கர் ஆகும். ஏரியின் முழு கொள்ளளவு 25 அடி ஆகும்.
ஐந்து மதகுகள் வழியாக 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று, அதிலிருந்து 3,000 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 7,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

