`பெண்கள் இருக்கக் கூடாது...’ - ஈஃபில் டவரில் குஜராத் சாமியார்கள் நிபந்தனை...
மற்றவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது என்பதற்காகவே, ஈஃபில் டவர் நிர்வாகத்துடன் பேசி, காலை நேரத்தில் அங்கு செல்வதற்கு ஏற்பாடு செய்தோம்.
பிரான்ஸ் நாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற பாரிஸ் நகரின் தனித்த அடையாளமாக கம்பீரமாக நிற்கும் ஈஃபில் டவர், வெறும் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல. அது, பிரான்ஸ் நாட்டின் குடியரசு கொள்கைகளான சுதந்திரம், சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றின் உலகளாவிய குறியீடு. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த மதிப்புமிக்க வரலாற்றுச் சின்னத்தில், குஜராத் சாமியார்களால் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
100 சாமியார்கள்!
18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவாமி நாராயணன் என்ற துறவி ஒருவரின் போதனைகளைப் பின்பற்றிச் செயல்படும், BAPS (போச்சவாசன்வாசி அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற இந்தியாவைச் சேர்ந்த, குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆன்மிக அமைப்பைச் சேர்ந்த 100 பேர் கொண்ட குழுவினர், பாரீஸின் புறநகர்ப் பகுதியில் தங்கள் புதிய கோயில் ஒன்றைப் பிரதிஷ்டை செய்வதற்காக சமீபத்தில் பிரான்ஸ் சென்றிருக்கின்றனர். லண்டன், லாஸ் ஏஞ்சலஸ், சிட்னி உட்பட உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் இந்த அமைப்புக்குக் கோயில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
