ரேடியல் சாலையில் 12 ஏக்கர் நிலம் ரூ.1,020 கோடிக்கு விற்பனை: ஜி.சி.சி., காரிடராக உருவெடுக்கிறது
சென்னை: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை, ஜி.சி.சி., எனப்படும் உலகளாவிய திறன் மைய வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு, 12 ஏக்கர் நிலத்தை, 1,020 கோடி ரூபாய்க்கு கே.எல்.ஏ., டென்கார் நிறுவனம் வாங்கியுள்ளது.
சென்னையில், மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையிலான பழைய மாமல்லபுரம் சாலை, தகவல் தொழில்நுட்ப வழித்தடமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்ப, இந்த வழித்தடத்தில் பல்வேறு ஐ.டி.,நிறுவனங்கள் வந்துள்ளன.
இந்நிலையில், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் வருகை அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக, ஜி.சி.சி., எனப்படும் உலகளாவிய திறன் மையங்கள் அமைப்பதில், பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.




