கல்லுாரி பஸ் மோதியதில் 4 மாணவியர் உயிரிழப்பு
எலச்சிபாளையம்: கல்லுாரி பஸ் மோதிய விபத்தில், ஒரே மொபட் டில் சென்ற கலைச்செல்வி, 20, உட்பட நான்கு மாணவியர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம், சக்ராம்பாளையம் புதுாரை சேர்ந்த சேகர் மகள் கலைச்செல்வி. தனியார் கல்லுாரி மாணவி.
நேற்று மதியம், கல்லுாரி முடிந்து, வீட்டுக்கு வந்த கலைச்செல்வி, தன் தங்கைகளான பிளஸ் 1 மாணவி நிவேதா, 16, ஏழாம் வகுப்பு படிக்கும் அனுஸ்ரீ, 12, உறவினரான ரமேஷ் பாபு மகள் அபிநயா, 11, ஆகியோரை, பள்ளியில் இருந்து, 'டி.வி.எஸ்., எக்ஸல்' மொபட்டில், வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.

