விபத்தில் 4 மாணவியர் உயிரிழப்பு பேரிகார்டு வைத்து வேகம் குறைப்பு
எலச்சிபாளையம்:சக்கராம்பாளையம் பிரிவு சாலையில், நான்கு மாணவியர் சாலை விபத்தில் உயிரிழந்ததையடுத்து,

பிரிவு சாலையில், நான்கு மாணவியர் சாலை விபத்தில்
உயிரிழந்ததையடுத்து, பேரிகார்டு வைக்கப்பட்டு வாகனங்களின் வேகம்
குறைக்கப்பட்டுள்ளது.
பிரிவு பகுதியில், கடந்த, இரு தினங்களுக்கு முன், தனியார் கல்லுாரி
பஸ், மொபட் மீது மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, நான்கு
மாணவியர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நடந்த பகுதியில் சாலை வளைவாக
இருப்பதால், சக்கராம்பாளையம் பகுதியில் இருந்து பிரதான சாலைக்கு
வரும் வாகனங்கள், ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் செல்லும் கனரக
வாகன டிரைவர்களுக்கு சரியாக தெரிவதில்லை.
இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள்
நிகழ்ந்து வருவதாகவும், விபத்துகளை தடுக்க வேகத்தடை அல்லது சாலை
தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக
கோரிக்கை விடுத்து வந்தனர்.
இரவு, சம்பவ இடத்தில் நாமக்கல் எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக் மற்றும்
திருச்செங்கோடு ஏ.எஸ்.பி., அஸ்வினி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பகுதி பொதுமக்கள் சாலை தடுப்புகள் அமைத்து வாகனங்களின் வேகத்தை
கட்டுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, விபத்து நடந்த பகுதியில் தற்போது இருபுறமும் சாலை
தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகனங்களின் வேகத்தை குறைத்து, எதிர்காலத்தில் விபத்துகளை தடுக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
