வால்பாறை எம்எல்ஏ சாதிச் சான்று விவகாரம்: அரசு, தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
திமுக எம்எல்ஏ சுதாகரின் சாதிச் சான்று குறித்து விசாரிக்க தமிழக அரசு, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வால்பாறை தனி தொகுதி திமுக எம்எல்ஏ சுதாகரின் சாதிச் சான்று குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வால்பாறை தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட குட்டி என்கிற சுதாகர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.




