கோவில் முன்பு ஈவெரா சிலை: கோர்ட் உத்தரவில் கலெக்டர் ஆய்வு
தஞ்சாவூர்: கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ஈவெரா சிலை உள்ள பகுதியை, தஞ்சாவூர் கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவில் முன் பகுதியில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அறநிலையத்துறை அனுமதியின்றி, சட்ட விரோதமாக நிறுவப்பட்டுள்ள ஈவெரா சிலை, கம்யூனிஸ்ட் கொடிக்கம்பத்தை அகற்ற, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. இதில், கோவில் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், 'மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் ஈவெரா சிலை நிறுவப்பட்டது.





