சென்னையின் 2வது புதிய விமான நிலையத்திற்கு 2 இடங்கள் தேர்வு
சென்னை: சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்காகத் தமிழக அரசு இரண்டு இடங்களைத் தேர்வு செய்துள்ளது; மேலும், இது குறித்து சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கோரியுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை, 2025ல் த.வெ.க., தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதனால் தற்போது விஜய் முதல்வரானதும், பரந்துார் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாற்று இடங்களைத் தேடப்போவதாக முதல்வர் விஜய் அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டிக்கு அருகிலுள்ள மனல்லூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்யுமாறு மாநில அரசு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு இடங்களும் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ள இடங்களாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இந்த இரண்டு இடங்களில் எங்கேயாவது ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்கும் பணியை தவெக அரசு கையில் எடுத்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் தனது சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் பரிந்துரைகளை வழங்கிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.











/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)