கரூர் சாலை சேதத்தை தவிர்க்க மழைநீர் வடிகால் வசதி
காஞ்சிபுரம்:கரூர் சாலை சேதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஏரிக்கரையோரம் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, கரூர் கிராமத்தில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது. பருவ மழை காலங்களில், கரூர் ஏரி நிரம்பினால், அதே கிராமத்தைச் சுற்றியுள்ள 450 ஏக்கர் நிலங்கள் நீர் பாசன வசதி பெறும்.
வட கிழக்கு பருவ மழையின் போது, கரூர் ஏரி நிரம்பினால், முத்தியால்பேட்டையில் இருந்து கரூர் கிராமம் வழியாக ராஜகுளம் செல்லும் சாலையில், தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலை சேதம் ஏற்பட்டு வந்தது.


