அரை ஏக்கர்... 90 மரங்கள்... ஆண்டுக்கு ரூ.2 லட்சம் லாபம்!
“அரை ஏக்கர் பரப்பில் 90 மா மரங்கள் இருக்கு. அதில் 20-30 மரங்கள்தான் காய்க்க ஆரம்பிச்சிருக்கு. அது மூலமாவும் ஒரு கணிசமான வருமானம் கிடைக்குது. எள், நிலக்கடலைச் சாகுபடி செய்றோம்.
இயற்கை கொய்யா கொடுக்கும் இனிப்பான மகசூல்!
``ஓய்வுக்காலம் என்பது, நாங்கள் பல ஆண்டுகளாகப் பார்த்து வந்த அரசுப் பணியிலிருந்து ஓய்வெடுப்பதுதானே தவிர, எங்கள் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுப்பதல்ல. இந்தக் காலகட்டம், மண்ணோடு இணைந்து, இயற்கை விவசாயத்தின் மூலம் புதியதொரு வாழ்வை தொடங்கு வதற்கான பொன்னான வாய்ப்பு’’ என நெகிழ்ச்சியோடு சொல்கிறார்கள், திருச்சியைச் சேர்ந்த தங்கம் அம்புரோஸ் - லில்லி கிறிஸ்டி தம்பதி.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரிலிருந்து விராலிமலை செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலம்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து ஓய்வுக்காலத்தை உன்னதமாக மாற்றியிருக்கிறார்கள், இந்தத் தம்பதி. ஒரு காலைப் பொழுதில் தோட்டத்தில் அவர்களைச் சந்தித்தோம். ``நாங்கள் பசுமை விகடனின் நீண்டகால வாசகர்கள்’’ என்று சொல்லி மகிழ்ச்சியோடு வரவேற்று தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்கள்.


