எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் வழக்கில், 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை 2 மாதத்தில் முடிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வதற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை இரண்டு மாதத்துக்குள் முடித்து, தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக் வந்தபோது, இந்த முறைகேடு தொடர்பாக இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய விவகாரத்தில், மத்திய அரசுக்கு விளக்கம் அளித்து கடந்த ஜூலை 22ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.







