அரும்புலியூர் சாலை வளைவுகளில் எச்சரிக்கை பலகை தேவை வாகன ஓட்டிகள் கோரிக்கை
அரும்புலியூர், செப். 17– அரும்புலியூர் சாலையில் உள்ள அபாயகரமான வளைவுகளில் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்ப
அரும்புலியூர் சாலையில் உள்ள அபாயகரமான வளைவுகளில் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்ப அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தில் இருந்து அருங்குன்றம் செல்லும் இணைப்பு சாலை வழியாக சீத்தாவரம், பழவேரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
மேலும், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தோர் வாகனங்கள் மூலம் இச்சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத், சாலவாக்கம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.



