உ.பி.யில் சிறுமி பாலியல் வன்கொடுமை! 16 வயது சிறுவனுக்கு 25 ஆண்டுகள் சிறை!
உத்தரப் பிரதேசத்தின், பல்லியாவில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவனுக்கு உள்ளூர் நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறப்பு அரசு வழக்குரைஞர் விமல் குமார் ராம் தெரிவித்தன்படி,
நீதிபதி பிரதம் காந்த், காசிபூரில் உள்ள சிறப்புக் கண்காணிப்பாளருக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, தண்டனை பெற்ற சிறுவனுக்கு 21 வயது பூர்த்தியாகும் வரை அவனது கல்வி மற்றும் உடல், மன வளர்ச்சியை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவனுக்கு 21 வயது பூர்த்தியான பிறகு, மீதமுள்ள தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்காக அவன் மாவட்ட சிறைக்கு மாற்றப்படுவான்.