Crime, law and justice
வாலிபருக்கு 27 ஆண்டு கடுங்காவல்: கடலுார் போக்சோ கோர்ட் தீர்ப்பு
கடலுார்:சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 27 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கடலுார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேத்தியாதோப்பு அடுத்த சோழத்தரம் புதுத்தொருவை சேர்ந்தவர் தனபால் மகன் பாலகுமார்,29; இவர் 2023ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொடர்பாக, சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மீது கடலுார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், பாலகுமரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 27 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.