மாநில டேபிள் டென்னிஸ் தருண், அனன்யா ‘சாம்பியன்’
சென்னை: சென்னையில் நடந்த மாநில டேபிள் டென்னிஸ் போட்டியில், ஆடவர் பிரிவில் தருண், 21, மகளிர் பிரிவில் அனன்யா, 17, ஆகியோர், ‘சாம்பியன்’ பட்டம் கைப்பற்றி அசத்தினர்.
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், 5-வது மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி, சென்னை ஐ.சி.எப்., உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. மாநிலம் முழுதும் இருந்து 400- வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதன் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், ஆர்.டி.டி.எச்.பி.சி., அணியின் தருண், 11 – -9, 11 – -8, 6 – -11, 11 – -9, 13 – -11 என்ற செட் கணக்கில், எஸ்.ஆர்.எஸ்.ஏ., அணியின் பிரேயேஷை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

