வட்டி வருவாய் உயரும் என்ற எதிர்பார்ப்பால் கணிசமாக உயர்ந்த வங்கி பங்குகள்
சிறப்பு அன்னிய செலாவணி 'ஸ்வாப்' திட்டத்தின் வாயிலாக, 136.38 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததையடுத்து, வங்கி பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றம் கண்டன.
அன்னிய செலாவணி வரத்தை அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் இந்த ஸ்வாப் திட்டத்தை அறிவித்தது.
இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த சிறப்பு வெளிநாட்டு நாணய வைப்புநிதி திட்டத்தின் வாயிலாக, கடந்த ஆகஸ்ட் 31 வரை சாதனை அளவாக 127.23 பில்லியன் டாலர் திரட்டப்பட்டுள்ளதாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
