‘இந்தியா திறன்’ போட்டிக்கு வரும் 15க்குள் விண்ணப்பம்
சென்னை: உற்பத்தி, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை அலங்காரம் உள்ளிட்ட திறன் சார்ந்து நடத்தப்படும், ‘இந்தியா திறன்’ போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ – மாணவியர், வரும் 15ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்ட அறிவிப்பு:
மத்திய அரசின் ஆதரவில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால், 2026 – 27ம் ஆண்டிற்காக, இந்தியாவின் முதன்மை திறன் போட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.





