இபிஎஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்; பங்கேற்காத முக்கிய புள்ளிகள்!
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (06-09-26) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். குறிப்பாக தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனால், எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணி தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட 25 மாவட்டச் செயலாளர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தார். அதுமட்டுமல்லாமல் தொகுதிகள் வாரியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 110 மாவட்டங்களாக விரிவுப்படுத்தி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)






