விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞர்கள் போராட்டம்!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வழக்குரைஞர்கள்... - DIN
விழுப்புரம்: விழுப்புரத்தில் இயங்கி வரும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாற்றும் முடிவை கைவிடக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வழக்குரைஞர்கள் முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டிச் சாலையில் இயங்கி வரும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை திருவண்ணாமலைக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.


