ஆட்டோ டிரைவரை தாக்கிய வழக்கில் த.வெ.க., எம்.எல்.ஏ. உட்பட 4 பேர் விடுதலை
ஸ்ரீவில்லிபுத்துார்: 2016ல் விருதுநகரில் ஆட்டோ டிரைவர் வேல்முருகனை தாக்கிய வழக்கில் விருதுநகர் த.வெ.க., எம்.எல்.ஏ., செல்வம் உட்பட 4 பேரை விடுதலை செய்து ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.விருதுநகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வேல்முருகன். இவரது உறவினர் திவாகர்.
இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்தது.
2016 செப்.8 இரவு ஆட்டோ ஸ்டாண்டில் வேல்முருகன் தனது அண்ணன் ராஜ்குமாருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திவாகர், அவரது நண்பரான தற்போதைய த.வெ.க., எம்.எல்.ஏ., செல்வம், பால மகேந்திரன், பாலகர்ணன் ஆகிய 4 பேர் இரும்பு கம்பியால் வேல்முருகனை தாக்கினர். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிந்தனர்.

