அரசு பங்களாவை காலி செய்யாத மாஜி அமைச்சர் மஹாதேவப்பா
பெங்களூரு: அரசு பங்களாவுக்காக போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ், முன்னாள் அமைச்சர் மஹாதேவப்பா இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா அரசில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மஹாதேவப்பா. இவருக்கு பெங்களூரின் பிரபலமான கிரெசன்ட் சாலையில் உள்ள 2ம் எண் கொண்ட அரசு பங்களா வழங்கப்பட்டிருந்தது.
சித்தராமையா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின், சிவகுமார் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதில் மஹாதேவப்பாவுக்கு இடம் கிடைக்கவில்லை.


