காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவ இடங்கள்.40! தமிழக அரசிடமே ஒப்படைக்க கோர்ட் உத்தரவு
-–சிறப்பு நிருபர்– தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள, ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ எனப்படும், உயர் சிறப்பு
40! காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவ இடங்கள்... தமிழக அரசிடமே ஒப்படைக்க கோர்ட் உத்தரவு
தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள, ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ எனப்படும், உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான 40 இடங்களை மாநில அரசிடமே ஒப்படைக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான காலி இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு மாநில அரசு வழங்கியது. அகில இந்திய அளவிலான மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், தமிழகத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள 40 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அப்படியே தமிழக அரசிடம் ஒப்படைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

