நாகை புது கடற்கரையில் அதிபத்த நாயனாா் விழா
அதிபத்த நாயனாா் தங்க மீனை இறைவனுக்கு அா்ப்பணிக்கும் விழா நாகை புதுகடற்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
63 நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாா் நாகையில் மீனவ கிராமத்தில் பிறந்தவா். சிவபெருமான் மீது கொண்ட பக்தியால், ஒவ்வொரு நாளும் கடலில் மீன்பிடிக்க செல்லும்போதெல்லாம் வலையில் சிக்கும் முதல் மீனை சிவபெருமானை நினைத்து வணங்கி, கடலில் விட்டுவிடுவது அதிபத்தரின் வழக்கம்.
அதிபத்தரின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் அவரது வலையில் நாள்தோறும் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும்படி செய்தாா். வறுமையில் வாடிய நிலையிலும், வலையில் சிக்கிய ஒரு மீனையும் இறைவனை நினைத்து கடலில் விட்டுவிட்டு வெறுங்கையுடன் அதிபத்த நாயனாா் வீட்டுக்கு திரும்புவாா்.


