அதிபத்தநாயனாரின் தெய்வ பக்தியை மெச்சிக்கும் விழா; கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு

நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தின் சார்பில், அதிபத்தநாயனாரின் தெய்வ பக்தியை மெச்சிக்கும் விழாவையொட்டி, சிவபெருமானுக்காக தங்க மீனை கடலில் விடும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அதிபத்த நாயனாரின் சிலையுடன் பம்பைமேளம் முழங்க ஊர்வலமாக நாகை கடற்கரைக்கு எடுத்துவரப்பட்ட தங்கமீன், படகில் கடலுக்குள் எடுத்துச் சென்று விட்டு எடுக்கப்பட்ட பிறகு மீண்டும் கரைக்குக் கொண்டுவரப்பட்டது.