“தெனம் தெனம் செத்து செத்து பிழைக்கிறோம்!”
எங்கள் பிள்ளைகள் மேல்நிலைப் பள்ளி, கல்லூரிப் படிப்புக்கு கும்பகோணம், திருவையாறு போறாங்க. உடம்பு சரியில்லைன்னா தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்குப் போவோம்.
பாலத்துக்காக பல ஆண்டுகளாக ஏங்கும் கிராமம்
கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவே தனித்தீவுபோல அமைந்துள்ள மேலராமநல்லூர், கீழராமநல்லூர் கிராம மக்கள், ஒரு உயர்மட்டப் பாலத்துக்காக 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவருகிறார்கள். “பாலம் இல்லாததால், ஆற்றுக்குள் இறங்கி நடந்தே வெளியுலகை அடையும் நிலை தொடர்கிறது” என்கிறார்கள் வேதனையுடன்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், அழகியமணவாளம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த இரு கிராமங்களிலும் 2,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நெல், கரும்பு, வாழை, காய்கறிகள், பூக்கள் என விவசாயம் செழிக்கும் பகுதி. ஆனால், கொள்ளிடம் ஆறு நான்கு புறமும் சூழ்ந்திருப்பதால், மக்களின் அன்றாட வாழ்க்கை, பெரும் போராட்டமாக இருக்கிறது.







