தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் இருந்து குஜராத்துக்கு இடமாற்றம்: 72 ஆண்டுகளில் முதல்முறை
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, தில்லியில் இருந்து குஜராத்துக்கு இடமாற்றப்பட்டது. கடந்த 72 ஆண்டுகளில் முதல்முறையாக தில்லியில் இருந்து இவ்விழா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது:
புது தில்லியில் இம்மாதம் 22-ஆம் தேதி தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற இருந்தது. இந்நிலையில், அந்த விழா நடைபெறும் இடம் புது தில்லியிலிருந்து குஜராத்தின் ஏக்தா நகருக்கு (கெவாடியா) மாற்றப்பட்டுள்ளது. ஏக்தா நகா், மறைந்த முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் நாட்டின் முதல் துணை பிரதமருமான சா்தாா் வல்லபபாய் படேலின் சொந்த ஊா் ஆகும். அங்குதான் அவரின் 597 அடி உயர பிரம்மாண்ட சிலை உள்ளது. அதை பிரதமா் மோடி கடந்த 2018-ஆம் ஆண்டில் திறந்து வைத்தாா்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



