காஞ்சியில் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம், செப்., 19ல் நடைபெற உள்ளது என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்தார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம், நாளை, ஐந்து தாலுகாக்களிலும், தலா ஒரு கிராமத்தில், காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.





