நீட் செய்த கொலை!
நீட்டின் கோரப் பல்லில் சிக்கி இன்னுமொரு மாணவி யைப் பறி கொடுத்திருக்கிறது தமிழகம்.
நெல்லையின் பாளையை ஒட்டியுள்ள அன்பு நகர், சித்தார்த் தர் ஏரியாவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். ஐ.டி. நிறுவனத் தில் பணிபுரியும் அரிகிருஷ்ண னுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள். மூத்தவள் ஸ்ருதிலயா, தனியார் பள்ளியில் 2023-ஆம் ஆண்டு ப்ளஸ் 2 படிப்பை முடித்திருக்கிறார். தங்கை மெட்ரிக் பள்ளியில் படித்துவருகிறார். 2023-ஆம் ஆண்டு ப்ளஸ் 2 படிப்பை முடித்த ஸ்ருதிலயா வை மருத்துவப் படிப்பில் சேர்க்கும் பொருட்டு தந்தை அரிகிருஷ்ணன் கோச்சிங் சென்டரில் சேர்த்திருக்கிறார்.
இயல்பிலேயே நன்றாகப் படிக்கும் ஸ்ருதிலயா நீட் கோச்சிங் படிப்பிலும் சிறந்த முறையிலேயே பயிற்சியெடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய ஸ்ருதிலயா விற்கு மருத்துவ படிப்பில் இடம்கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு கடும் முயற்சிக்குப்பின் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்கிறார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான முதற்கட்ட கவுன்சிலிங் நடந்து வருகிறது. மருத்துவப் படிப்பிற்கு தேர்வான வர்களுக்கான பட்டியல் வெளியான நிலையில் அதில் ஸ்ருதிலயாவின் பெயர் வரவில்லை.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

