வரும் 30க்குள் வரி செலுத்த குடிநீர் வாரியம் வேண்டுகோள்
சென்னை: நடப்பு அரையாண்டுக்கான குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணத்தை, வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குடிநீர் வாரியத்தில், 2026 - 27ம் ஆண்டின், முதல் அரையாண்டுக்கான குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணம், ஏப்., முதல் செப்., மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.


