முதியவரிடம் ரூ.25.60 லட்சம் மோசடி :உடந்தையாக இருந்த வாலிபர் கைது
அம்பத்துார்: முதியவரிடம் ரூ.25.60 லட்சம் மோசடி செய்த கும்பலுக்கு, வங்கி கணக்கு விபரங்களை கொடுத்து உதவிய, தெலுங்கானாவைச் சேர்ந்த வெமுலா சிவசங்கர், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்துார், ஒரகடத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் பொன்ராஜ் வைரமணி, 65. கடந்த மாதம், ஆவடி போலீஸ் கமிஷனரக, இணைய வழி குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன், மொபைல்போன் வாயிலாக என்னை தொடர்பு கொண்ட நபர், தெலுங்கானா மாநில சி.பி.ஐ., அதிகாரி என கூறினார். நான் சட்டவிரோத பண பரிவர்த்தனை மேற்கொண்டதாகவும், வங்கி கணக்கை முடக்கி என்னை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்யப்போவதாகவும் மிரட்டினார்.
