மெஸ்ஸிக்கு பிரியாவிடை..! ஆர்ஜென்டீன ஜெர்ஸியில் கடைசியாக ஓர் ஆட்டம்!
ஓய்வை அறிவித்தாலும் லியோனல் மெஸ்ஸி கடைசியாக ஒரு போட்டியில் ஆர்ஜென்டீன ஜெர்ஸியில் விளையாடவிருப்பது குறித்து...
சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தாலும் லியோனல் மெஸ்ஸி கடைசியாக ஒரு போட்டியில் ஆர்ஜென்டீனா அணியில் விளையாடவிருப்பது உறுதியாகியுள்ளது.
ஆர்ஜென்டீனா வரும் அக்.6ஆம் தேதி பெனின் உடனான நட்பு ரீதியான ஆட்டத்தில் விளையாடவிருக்கிறது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி கடைசியாக ஒருமுறை விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார்.





