Politics
போராடும் தூய்மைப்பணியாளர்கள்! சந்திக்க மறுக்கும் முதல்வர்!

சென்னை மாநகாரட்சியின்கீழ் செயல்படும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிக்காலத்திலிருந்து தற்போதைய த.வெ.க. ஆட்சி வரையிலும் தங்களுக்கான உரிமைகளுக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.
முதலில், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 11 மண்டல தூய்மைப்பணிகளை தனியாருக்கு தாரைவார்த்தது. அடுத்துவந்த தி.மு.க. ஆட்சியிலும், சென்னை, கோவை மாவட்டங்களில் தூய்மைப் பணியாளர் களை தனியார் மயமாக்கிய நிலையில், சென்னை யை பொறுத்தவரை, 4, 7, 8 ஆகிய மூன்று மண்ட லங்கள் தவிர அனைத்து மண்டலங்களும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சி கள் மாறி தற்போது த.வெ.க. ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபின்னரும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறார் கள். அரசு தரப்பில் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவருகிறார்கள். முதல் வர் இவர்களை சந்தித்துப்பேச மறுத்துவருகிறார்.
தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதால் தமிழகம் முழுவதுமே 2 லட்சம் பணியாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகளான, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உரிய ஊதியம் மற்றும் ஊதியத்துடன் கூடிய வார விடுப்பு, பணிபுரியும் இடங்களில் கழிவறை உள்ளிட்டவை குறித்து தமிழக முதலமைச்சரிடம் நேரில் சந்தித் துப் பேசவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இவர் களை ஏன் முதல்வர் நேரில் சந்திக்கவில்லையென்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோவி.செழியன், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட அனைவரும் கேள்வியெழுப்பினர். "ஆளுங்கட்சி தேர்தல் அறிக்கையில் கொடுத்த முக்கியமான வாக்குறுதி, தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்டவை. இந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இன்றோடு அவர்களுடைய போராட்டம் 15வது நாளை எட்டியிருக்கிறது. முதலமைச்சரை அவர்கள் நேரடியாகச் சந்தித்து கோரிக்கையை வைக்க வேண்டுமென்று தொடர்ந்து போராடிக்கொண்டி ருக்கிறார்கள் என்றார் உதயநிதி. அதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "அனைத்தும் தயார்செய்து வருகிறார்கள். கூடிய விரைவில் தீர்வு காணப்படும். தூய்மை தேவதைகளுக்கான கழிப்பறை, பணிக்கான உபகரணங்கள், வாகனம் மற்றும் உணவுக்குப்பதிலாக அதற்கான பணமாக கொடுக்கப்படும்'' என்றார்.
இந்த நிலையில், உழைப்போர் உரிமை இயக்கம் சார்பிலோ, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை 4ஆம் தேதிக்குள் நிறைவேற்றா விட்டால், ரிப்பன் மாளிகையிலிருந்து வெளியேறி, தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். "தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளின் உணவு, படிப்பு என அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளது. இவர்களை ஒருமுறை சந்தித்துப் பேசுவதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல்? சிறைக்கைதிகளைவிட தரம் தாழ்ந்துவிட்டார் களா?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


