Lifestyle and human interest
தினமலர் தினம் தினம் பூக்கிற மலராக இருப்பது பெருமை; தபால் தலை வெளியிட்டு சிபிஆர் புகழாரம்

சென்னை: ''எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும் என்ற உணர்வுடன் பாடுபடும் தினமலர் நாளிதழுக்கு வாழ்த்துக்கள்'' என்று, தினமலர் நாளிதழின் 75 ஆண்டு நிறைவு முன்னிட்டு சிறப்பு தபால் தலையை வெளியிட்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
'தினமலர்' நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு, சென்னையில் இன்று(செப்.,5) தபால் தலை வெளியீட்டு விழா நடந்தது. இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தபால் தலையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பத்திரிகை நடத்துவதே கடினம்; அந்த பத்திரிகையை நடுநிலையோடு நடத்துவது அதை விட கடினம்.
அப்படி உழைக்கின்ற போது தான் அந்த உழைப்பு வரலாறு ஆகு மாறுகிறது. அந்த பவள விழாவில் வரலாற்றில், சிறப்பு தபால் தலையை வெளியிட்டு உங்களோடு எனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.
அப்படியொரு இலக்கணத்திற்கு சொந்தமான தினமலர் தினம் தினம் பூக்கிற மலராக இருப்பது நமது தமிழுக்கு பெருமை என்று கருதுகிறேன். உண்மையின் உரைகல் ஆக திகழ வேண்டும் என்ற உறுதியோடு 75 ஆண்டுகளை தினமலர் நிறைவு செய்து இருக்கிறது.
சில பேர் பிறந்து வளர்ந்து போராளியாக மாறுவார்கள், ஆனால் சில பேர் பிறக்கிற போதே போராளியாக இருப்பார்கள். தினமலர் அப்படி பிறந்த இடத்தில், பிறந்த இடத்திற்கே எதிராக போராடிய மகத்தான பத்திரிகையாக இருக்கிறது. திருவனந்தபுரத்திலேயே பிறந்தாலும் அந்த பகுதியை சேர்ந்த சில பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று போராடிய போராளியாக ராமசுப்பு ஐயர் திகழ்ந்து இருக்கிறார்.
அது தான் இன்றைக்கு வரைக்கும் தினமலர் நாளிதழுக்கு மகத்தான உத்வேகத்தை, எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்க சொல்ல வேண்டும் என்கிற உணர்வை தந்து இருப்பதாக நான் கருத்துகிறேன். அப்படி பிறக்கும் போதே சில பேர் மகத்தான ஆசையோடு பிறக்கிறார்கள்.
எந்த இடத்திலும் யார் தவறு செய்தாலும் அதைத் துணிந்து தவறு என்று கூறுவதற்கு பெயர் தான் பத்திரிகை தர்மம். பத்திரிக்கை என்பது லாபகரமாக நடக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அது லாபகரமாக நடக்கிற பொழுது தான் காலத்தை கடந்து வெற்றிகரமான பத்திரிகையாக இருக்க முடியும். ஆனால் அப்படி லாபகரமாக நடப்பதற்கு பல்வேறு விதமான சமரசங்களை செய்து கொள்ளாமல், தான் கொண்ட நிலைப்பாட்டில் நின்று உண்மையை உரைக்க சொல்வதோடு, தன்னையும் நிலை நிறுத்திக் கொள்ளக்கூடிய பத்திரிகையாக தினமலர் இருப்பது பாராட்டக்குரியது.
உண்மையும், நேர்மையும் அடித்தளமாக இருந்தால் உழைப்பு நம்மை எந்த உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற உதாரணத்திற்கு, மகத்தான உதாரணமாக தினமலர் விளங்குகிறது. அடுத்த தலைமுறையினருக்கான வாசலை திறந்தால் மட்டுமே வளர்ச்சிக்கான வாய்ப்புகள் வளரும். அடுத்த தலைமுறைக்கான மாணவர்களுக்கு பொது அறிவு உள்ளிட்டவற்றை கொண்டு சேர்க்கிறது தினமலர்.
எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கு எதிராக எழுதினாலும் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் முதல் நடவடிக்கை எதுவாக இருக்கும் என்றால் விளம்பரங்களை தராதீர்கள் என்பதாக தான் இருக்கும். ஆனால் அதையும் தாண்டி ஒரு பத்திரிகை உண்மையை உரக்க சொல்கிறது என்றால், அதில் தான் உண்மை, வாய்மை, தியாக மனப்பான்மை இருக்கிறது.இவ்வாறு சிபி ராதாகிருஷ்ணன் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தினமலர் பவள விழா தபால் தலை வெளியீட்டு விழா கொண்டாட்டம்; நேரலை ஒளிபரப்பு



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
