Politics
தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை,பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரண்டு வாரங்களாகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்தனர். இதையடுத்து, சென்னை ரிப்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரண்டு வாரங்களாகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்தனர். இதையடுத்து, சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மைப்பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இன்று நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில், அரசுத் தரப்பில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றில் பெரும்பாலானவற்றை உடனடியாக நிறைவேற்ற அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர்.
அரசின் இந்த சாதகமான முடிவைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


