Crime, law and justice
நவோதயா பள்ளிகளை வரவிடாமல் தடுப்பதா? தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி

புதுடில்லி: நவோதயா பள்ளிகளை வரவிடாமல் தடுப்பதா? என தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று (செப் 17) சுப்ரீம்கோர்ட் நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா தனது வாதங்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவங்க உத்தரவு பிறப்பிக்க கூடாது. தமிழகத்தில் போதுமான அரசு பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் ஹிந்தி பயில எந்த தடையும் இல்லை; ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி கல்விக் கொள்கை இருக்கிறது, நவோதயா பள்ளி மாநில கல்வி கொள்கைக்கு எதிரானது.
இந்தியா கூட்டாட்சி தத்துவத்தில் இயங்கும் நாடு; ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனி கொள்கைகள் உண்டு. இது நிலைப்பாடு சார்ந்த பிரச்னை இல்லை; மாறாக அரசின் கொள்கை சார்ந்த விவகாரம். ஹிந்தி திணிப்பு மட்டும் காரணம் அல்ல, நிதி சார்ந்த பிரச்னைகளும் உள்ளன. மத்திய அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல தர வேண்டியிருக்கிறது, என்றார்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.