Politics
“இந்தியாவில் ஸ்டார்ட் அப் புரட்சி நடைபெற்று வருகிறது” - பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் மோடி, இந்தியாவில் ஸ்டார்ட் அப் புரட்சி நடப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
உலகில் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவும்போது இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் ஸ்டார்ட் அப் புரட்சி நடைபெற்று வருவதாகக் கூறினார். முன்னதாக பேசிய ரஷ்ய அதிபர் புதின், கடந்த 5 ஆண்டுகளில் உலக ஜிடிபி-யில் பிரிக்ஸ் நாடுகளே 40 சதவீத பங்களிப்பை வழங்கி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பிரிக்ஸ் நாடுகளில் வசிப்பதாகவும் புதின் தெரிவித்தார். உலகளவில் வர்த்தகத் தடைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா பொருளாதார ரீதியான பாலங்களை அமைத்து வருகிறது. 2014ஆம் ஆண்டு முதல், நாங்கள் சுமார் 40 நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம்.
அதேவேளையில், 'ஜி7' (G7) என்று அழைக்கப்படுபவற்றின் பங்களிப்பு வெறும் 29 சதவீதமாக மட்டுமே உள்ளது. அவை ஏன் 'சிறந்த 7' நாடுகள்' என்று அழைக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை எனவும் புதின் தெரிவித்தார்.
