Politics
“டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடங்கள் அமைக்கப்படும்” - அமைச்சர் விக்னேஷ் பேட்டி!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடங்களும் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்க உள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க. விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க. விக்னேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், “டாஸ்மாக் பார்களுக்குள் சைடிஷ்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுகிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் க. விக்னேஷ், “இன்னும் ஒரு மாதத்தில் பார் டெண்டர் வந்துவிடும். அதில் உணவுக் கூடங்களும் நடத்திக்கொள்ளலாம் என்ற ஒரு ஐடியா உள்ளது. ஏனென்றால், அதில்தான் எஃப்.எஸ்.எஸ்.ஐ. வைத்து அவர்கள் சென்று தர நிர்ணயம் உள்ளிட்டவற்றை செய்ய முடியும். அப்போது இதெல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறோம். ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
