Lifestyle and human interest
முதுமலை, நடுவட்டம் பகுதிகளில் தானியங்கி கேமரா விரிவடையும் ஆட்கொல்லி புலியை பிடிக்கும் எல்லைகள்

கூடலுார்: கூடலுார் அருகே இருவரை தாக்கி கொன்ற, புலியை பிடிக்க நடுவட்டம் எல்லைகளிலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
கூடலுார் லாரஸ்டன் பகுதியில், 2 பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்கும் பணியில், 21ம் தேதி முதல் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த, 4ம் தேதி லாஸ்டன் கோக்கால் மலையில் ட்ரோன் கேமராவில் தென்பட்ட புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் போராடினர். ஆனால், புலி முட்புதகளில் சென்று மறைந்தது.
தொடர்ந்து, டிரோன் கேமராக்கள் உதவியுடன், 18வது நாளாக நேற்று வன ஊழியர்கள் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், புலி தென்படவில்லை.
இந்நிலையில், கூடலுார் எல்லையை ஒட்டிய நடுவட்டம் வனப்பகுதியில், 37 இடங்களிலும், முதுமலை மசினகுடி வன எல்லைகளில், 54 தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், ‘புலியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். எனினும், 4ம் தேதிக்கு பின், இன்று (நேற்று), வரை புலியின் இருப்பிடம் தெரியவில்லை. இதன் தொடர்ச்சியாக நடுவட்டம், மசினகுடி எல்லைகளிலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகிறோம். புலி இன் இருப்பிடத்தை கண்டுபிடித்து, அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை டாக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், ஆபத்துகளை தடுக்க. கிராம மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,’ என்றனர்.

