Politics
எ.வ.வேலுக்கு எதிரான வழக்கு; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த திமுக மூத்த தலைவர் எ.வ.வேலு, சமீபத்தில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பாக் போட்டியிட்டார். அதில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக, அதிமுக வேட்பாளர்களை வீழ்த்து சுமார் 2,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எ.வ.வேலுவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதே சமயம், தனக்கு எதிராக போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என எ.வ.வேலு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (16-09-26) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு வந்தது.
அப்போது, எ.வ.வேலுவின் வெற்றியை எதிர்த்து போடப்பட்ட தேர்தல் வழக்கை விசாரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறி, தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் தாக்கல் செய்திருந்த வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, திமுக எம்எல்ஏ எ.வ.வேலுவின் வெற்றியை உறுதி செய்து உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


