நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. திருப்புவனத்தில் கிடுகிடுவென உயர்ந்த வாழை இலை விலை.!

வாழை இலைகள் வரத்து குறைவும் விலை அதிகரிப்புக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆவணி முகூர்த்த நாட்களையொட்டி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை இலைகளின் தேவை அதிகரித்துள்ளதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
திருப்பாச்சேத்தி, கானூர், மாரநாடு, மடப்புரம், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை பயிரிடப்படுகிறது. முகூர்த்த நாட்களை கணக்கிட்டு திருப்புவனம் வட்டாரத்தில் 867 ஏக்கரில் நாட்டு வாழை மற்றும் ஒட்டு வாழை பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆவணி முகூர்த்த நாட்களையொட்டி வாழை இலைகளின் விலை தற்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு, கடந்த வாரம் 1000 ரூபாய் வரை மட்டுமே விற்பனையான நிலையில் தற்போது 3000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வாழை இலைகள் வரத்து குறைவும் விலை அதிகரிப்புக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. வாழை இலைகளின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
