Arts, culture, entertainment and media
நடிகர் சுஷாந்த் சிங் மேனேஜர் மரண வழக்கில் புதிய ட்விஸ்ட்.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ வழக்குப் பதிவு..!

மும்பையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் திஷா சாலியன் மரண வழக்கில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் மீது CBI வழக்கு பதிவு செய்துள்ளது. 2020-ல் தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு, தற்போது மீண்டும் கொலை வழக்காக விசாரணைக்கு வந்திருப்பதன் பின்னணி என்ன?.
2020 ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி மும்பை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாலிவுட்டையும் அதிர வைத்த மரணம் அன்று நிகழ்ந்தது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் திஷா சாலியன் கட்டிடத்தின் 14-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். திஷாவின் மரணம் நிகழ்ந்த ஆறு நாட்களுக்குப் பிறகு, ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்து கிடந்தார்.


